பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 புல்லின் இதழ்கள்

“என்னுடைய அபிப்பிராயத்தை அன்றே சொல்லி விட்டேனே. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய்விட்டால் சீக்கிரமே கல்யாணத்தை நடத்தி விட வேண்டியதுதான்,

இதைவிட ஹரிக்கு நாம் நல்லது வேறு எதுவும் செய்ய முடியாது. வசந்தியின் குணத்துக்கும் அறிவுக்கும் அவன் தான் புருஷனாக இருக்கத் தகுதியுடையவன். திருமணத் துக்குப் பிறகும் அவன் நம்மை விட்டுப் பிரிந்து போக முடியாது என்ற மகிழ்ச்சிதான் எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரிதாகப் படுகிறது’ என்று உணர்ச்சி பொங்கக் கூறி நிறுத்தினார்.

உடனே சுந்தரி, வசந்தியின் சம்மதத்தை நான் கேட்கவே வேண்டியதில்லை. நீங்கள் எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வந்து செய்த காரியத்தை அவள் ஹரியிடம் பாட்டுக் கற்றுக்கொண்டு செய்து வருகிறாள். வரவர அங்கே டியூஷனா நடக்கிறது? பாவம்! ஹரிதான் என்னவோ தொண்டை கிழியக் கத்திவிட்டுப் போகிறான். அவள், பாட்டைத் தவிர மீதி அரட்டையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கிறாள். அவனும் ஒரு நாளாவது அவளைக் கோபித்துக் கொண்டு, கண்டிக்கவோ திட்டவோ செய்வானாக்கும் என்று பார்க்கிறேன். அவன் வாயே திறப்பதில்லை’ என்றாள்.

ஒரு வேளை இப்போதே பெண்டாட்டி தாசனாகி விட்டானோ என்னவோ? இருக்கட்டுமே அப்படியுந்தான் ஒரு ஜோடி!’

  • தாராளமாய் இருக்கட்டுமே. நானா வேண்டாம் என்கிறேன்? லட்சுமி அககாவிடம் இந்த அபிப்பிராயத் தைச் சொன்னிர்களா?'’

இனிமேல் சொன்னால் போயிற்று. ஹரியும் இப் போதுதானே நாலு கச்சேரிக்குப் போய்க் காசு