பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயம் வெளுத்தது 333

‘’ என்ன இது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஹரி.

து ே மி + - - * *

குடமிளகாய். பாகவதருக்கு ரொம்பப் பிடிக்கும். வாசலில் வந்தது. கொண்டு போய்க் கொடுங்கள்’’ என்றார்.

  1. * து; * * - அது சரி. இதுக்கு என்ன ஆச்சு:

“சரிதான் அண்ணா, புறப்படுங்கோ. நீங்க வேறே! பையன்கள் உங்கள் ரெயில் செலவுக்கு ஏதாவது பாக்கி வைத்திருக்கிறான்களா இல்லை, வேணுமா?’ என்று வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தார். வரும்போது, ஹரி உள்ளே போய் நாராயண சாமியின் அம்மாவிடமும், மனைவியிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

வாசலில் ஜட்கா வண்டி தயாராகக் காத்துக் கொண்டிருந்தது.

ஸ்டேஷனுக்கு வந்த ஹரி, டிக்கெட்வாங்கிக் கொண்டு பாலத்தின் மீதேறினான். சொன்னபடி, பக்கிரி காத்துக் கொண்டிருந்தான். ஆயிரம் ரூபாய் கையில் வந்து விழப்போகிறது என்று கனவு கணட பக்கிரிக்கு, போன இடத்தில், நான் தேடிப்போன ஆள் இல்லை. காரியம் இனிக் கைகூடுவது கஷ்டந்தான்; என்றாலும் நான் முயற்சி செய்கிறேன்’ என்று ஹரி கூறிய சமாதானம் கசப்பான மாத்திரைகளை விழுங்குவது போலிருந்தது. ஆயினும், என்ன செய்ய; கொடுத்தா வைத்திருக்கிறோம்?’ என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண் டான்.

பர்ஸிலிருந்து ஐம்பது ரூபாய் பணத்தை எடுத்துப் பக்கிரியிடம் கொடுத்தான் ஹரி.

‘இந்தப் பணத்தைப் பத்திரமாக வீட்டில் சேர்த்து விடு. இனிமேல், என்னால் முன்மாதிரிப் பணம் அதிகம்