பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்தவர் கூடினர் 79

அவர் அவளருகில் உட்கார்ந்து மிகவும் பரிவோடு விசாரித்தார்; இந்தப் பெண்ணைத் தவிர உனக்கு வேறு யாரும் துணைக்கு இல்லையா, சுந்தரி?’’

‘இல்லாமல் என்ன? நான் என்ன அநாதை என்று எண்ணிக் கொண்டீர்களா? என்னைப் பார்த்து, என் பாட்டைக் கேட்டு ஒரு மகாவித்துவானே மயங்கிப் போய் விட்டார். போனவர் மயக்கம் தெளிந்து பாவம், இன்று தான் வந்திருக்கிறார்’ என்று கூறி விட்டு கலகல வென்று நகைத்தாள். அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தார் அதன் பிறகு அந்த வீட்டில் அந்தச் சிரிப்பு ஒயவே இல்லை.