பக்கம்:பூங்கொடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ள னர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் கா ட் டு கின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து கின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம்.

அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆல்ை மறக்க முடி யாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத் திற் கொண்டு உணர்ச்சி குன்றா வகையில் எளிய, இனிய நடையில் தமிழ்மொழி வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இப் பூங்கொடி. இப் பூங்கொடி வாயிலாகத் தமிழ்மொழியைப் பாரெங்கும் பரப்பக் க வி ளு ர் முடியரசன் முனைந்துள்ளார். கவிஞர் அவர்கள் புத்தம் புதிய போக்கில், மறு மலர்ச்சி எழுச்சி கொள்ள இதனைப் படைத்துள்ளார். இதன் சுவையை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எ ன் ப ேத எங்கள் ஆவல்.

வழக்கம் ப்ோல உங்கள் ஆதரவு உண்டு என்ற நம்பிக்கையுடன் இரண்டாம் பதிப்பாக இதனை வெளியிடு கின்றாேம். வணக்கம்.

புதுக்கோட்டை ) பு. அ. சுப்பிரமணியன்,

14 — 3 — ‘70 f பதிப்பக உரிமையாளர்.

IX

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/12&oldid=665595" இலிருந்து மீள்விக்கப்பட்டது