பக்கம்:பூங்கொடி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

195

200

205

அடுத்தடுத் தவள்பால் அணுகுதல் வேண்டும் ; தோல்வி கண்டுளம் துவளுவை யாயின் பால்மொழி நின்பால் பரிவுறல் யாங்வனம்? மறுத்தனள் அவளென உரைத்தனே இளைஞ ! ஒருத்தி யவள்முனம் ஒருமுறை யேனும் கருத்தினே விளக்கிக் கழறிய துண்டோ? அவள்கருத் துன்பால் அறைந்ததும் உண்டோ? மூங்கை கிலேயில் மொழியா திருந்துயின் ஆங்கவள் நெஞ்சம் அளித்திலள் என்றே வீண்குறை கூறினே தனிமையில் அவளைக் காண்கில வினில் கலங்குதி மடவோப் ! ஆகலின் அறிவ அவள்பாற் செல்லுதி ! எத்திறக் கவள்மனம் உவக்கும் எனவுணர்ந்து அத்திறக் கானே அணுகுதி பயன்கரும் ; பெண்மனம் என்பது கன்மனம் அன்றே உண்மையின் விரும்பும் ஒருவனேக் காண்புழி வெண்ணெயின் உருகும் தன்மைய தாகும்;

210 ஐயா! நீயும் அவள்பாற் சென்று

215

பொய்யா மனத்துப் பூத்துள காதலை எ ப்யா துரைத்தனே யாயின் அந்தக் கொய்யாக் கனியைக் கொப்திடல் ஆகும்; ஒய்யென விாைகெனக் கோமகற் குரைத்தலும்;

கோமகன் எழுச்சி

திரியின் பிழம்பு சிறிது சிறிதாக் குறுகி அணைந்து மறையும் கிலையில் குறைதிரி தாண்டிக் குறையா நெய்யும் ஊற்றிட கிமிர்ந்தொளி ஒங்குவ தென்னக் சாற்றிய காமம் தளர்ந்திறும் நிலையில்

134

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/153&oldid=665632" இலிருந்து மீள்விக்கப்பட்டது