பூங்கொடி
70
75
80
85
90
சிறையினுட் பூங்கொடி
காரிரு ளாட்சியிற் கட்டுனும் மாந்தர் கூரிய நெடுவேல் கொளுவிய காவலர் இருகிலம் மருவிய இருதிணே எனப்படும் பொருள்கள் யாவும் புவிமிசைச் சோர்ந்தன ; நெஞ்சினே வருத்தும் கெடுத்துயர் ஒன்றும் , துஞ்சுத லொழிக்க துணைவிழி யிரண்டும், வஞ்சியின் மனத்து வளர்தமிழ் மூன்றும், சூழ்மதிற் சிறையினுட் சோரா திருந்தன ; தாழ்குழல் ஆங்குக் கனியிருங் கனளே ,
கதிரவன் தோற்றம்
கொடுங்கோ லாட்சி நெடும்பகல் கில்லாது ; மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் படும்படும் அந்தக் கெடும்பரின் ஆட்சி ; உயிர்வரின் உக்குறள் ஒடுகல் போலக் கதிர்வர வறிந்து காரிருள் ஒடிப்
பதுங்கி மறைந்தது, பகலவன் வளர்த்தான் ;
அறமன்றத்தில் பூங்கொடி
மறமிகு காவலர் வயங்கிழை தன்னை அறங்கூ றவையத்து கிறுத்தின ராகத் திறம்பா வுரையினர் செவ்விய மனத்தினர் கோல்போல் ஒருபாற் கோடா நடுவர் பால்போல் முகத்துப் பாவையை நோக்கிக் குற்றஞ் சாற்றினர் ; மற்றவள் மறுத்துச்
செற்றேன் அல்லேன் செந்தமிழ் ஆணை ; உற்ற இக் கொலையில் ஒருதொடர் பில்லேன் ,
180