பக்கம்:பூங்கொடி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

150

5

அயல்நாடு சென்று வந்த காதை

ஆயும் மலேயுறை யடிகளும் பிறரும் தோயும் மகிழ்வால் துள்ளினர் உள்ளம்;

புது நூல் படைத்தல்

நாடுகள் தோறும் நடந்தன விளக்கி ஏடுகள் கொணர்ந்தன எவை அவை துலக்கிப் பொருளியல் நூலும் புதுப்புதுப் படைப்பும் அறிவியல் நூலும் அருங்கவித் திரட்டும் உளநூல் நிலநூல் உண்மைக் கத்துவம் பலவர லாறும் படைத்தனள் தமிழில் கலையெலாம் தமிழில் இலையெனுங் குறையினி இலையெனச் செய்தனள் எம்முயர் தலைவி; மூச்சும் பேச்சும் முத்தமிழ்க் காக்கி ஏச்சும் பேச்சும் இடரும் துச்சம் எனஅவை ஒதுக்கி மனமொழி செயலால் அனேமொழி தமிழுக் கருஞ்செயல் ஆற்ற வல்லவள் அவளே வாழிய மகளே. (158)


211

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/230&oldid=665717" இலிருந்து மீள்விக்கப்பட்டது