பக்கம்:பூங்கொடி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

45

DU)

55

படி ப்பகம் புக்க காதை

பூங்கா எழிலும் பொய்கையும் காட்டப்

பூங்கொடி அவ்வெழிற் பூவனம் காண்புழி,

கோமகன் முகுந்தனை வினவல்

அவ்வூ ராங்கண் அரிகின் முயன்றுறு பெருநிதிக் கிழவன் பெட்புறு மைக்கன் கோமகன் என்பான் கோடுயர் மாட மாமறு கோரம் வருவோன் எதிரில் வாடிய முகத்தன் வருதுயர் மனத்தை மூடிட முகுந்தன் முன்வரு வோனே விதியில் என்னெதிர் வருந்தினை வருவோய்! எதம் உற்றது யாதென் றுரை'என,

| முகுந்தன் துயரம்

மாகர் பூங்கொடி மலர்வனம் புகுவோள் வழின நிர்ப் படலும் வடிவேல் உற்ற வெய்துயர் நெஞ்சில் வேலெனக் தைக்க நொந்துழல் மனத்தேன் தும்வால் அறியேன் சிக்தனை லினேவொடு செல்லுதல் உற்றேன் யானுறும் இடும்பை இஃதே என்றனன்;

கோமகன் ஆவல்

மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான் என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான்

வில்விடு அம்பென் விரைந்தனன் கோமகன்;

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/38&oldid=665780" இலிருந்து மீள்விக்கப்பட்டது