பக்கம்:பூங்கொடி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

115

120

குருதி சிந்தினர்

தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக் கடும்புயல் என்னக் கனன்றெழும் காளேயர் கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்; தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர் சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, குருதி கண்டும் உறுதி குலேத்திலர் முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள் உணர்ச்சியும் அதனே டுள்ளெழும் எண்ணமும்

பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே!

சிறையும் சிந்தையும்

இளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் தளர்ந்திறும் புரட்சினன் றுளந்தனிற் கொண்டோர் சிறையகங் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்; சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ? குறைமதி யாளர்கம் கொள்கை அஃதாம்;

125 சிறையகம் போலச் சிந்தனே வளர்க்கும்

130

உறைவிடம் மற்றாென் றுலகில் உளதோ: எண்ணமும் கருத்தும் எலியோ பொறியுள் நண்ணிய பின்னர் நசுக்க ஒல்லுமோ?

உண்ணு நோன்பு

எண்ண இயலா இளைஞர் தம்முள் உண்ணு நோன்பினை ஒருவன் மேற்கொள அஞ்சிய அரசினர் அகட்டினர் அவனே, நஞ்சையும் கொள்கைக்கு நயந்துண் டோர்பலர் காட்டிய நெறிகள் கண்டோ தைலின் ஊட்டிய உணவை உமிழ்ந்தனன் மேலோன்;

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/55&oldid=665799" இலிருந்து மீள்விக்கப்பட்டது