இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
•தீபாவளி மலருக்குச்
சிறுகதையொன் றெழுதோணும்
பாபாத்மா, கொலைகளவு
பட்டினிகள் பெரும்பஞ்சமாகாது
சாகாத கதாபாத்ரம்
சரசரக்கும் புதுப்புடவை
தோதாக வரும்படிக்குச்
சோகங்கள் ஏதுமின்றித்
தீபாவளி மலருக்குச்
சிறுகதையொன் றெழுதோணும்
ஆபாச விஷயங்கள்
அத்தனையும் வந்தாலும்
சோபாவில் துவண்டிருக்கும்
சொகுசான கதைத்தலைவி
வாவா வென் றழைப்பதுபோல்
வடிவழகைக் காட்டிடினும்