பக்கம்:பூமியின் புன்னகை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பூமியின் புன்னகை

காலையிலே எடுக்குங்காற் கைதவறிக்
காலடியிற் போட்டுவிட்டா னையையோ!

கடவித்வான் மனைவி யென்னைக்
கையாலே வாரிப்பின் குப்பையிலே

படபடவென் றொலித்திடவே கொட்டிவிட்டாள்
பாருங்கள் நண்பர்களே என் வாழ்வை
 
தொடக்கூசும் களிமண்ணாய் இருந்தவென்னைத்
தொழிலாளி குடமாக்கி விற்றுவிட்டான்

கடக்காதல் வித்வானும் பெற்றுவிட்டான்
கச்சேரி மேடையிலும் தட்டிவிட்டான்

மண்ணோடு மண்ணாகக் கிடந்தவெனை
மதிநுட்பத் திறனாலே உருவாக்கிப்

பண்ணோடு கூடுமிசை செயச்செய்தான்
பாழும் விதியதனைப் பொறுக்கவில்லை.

மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டேன்
மறுபடியும் குயவனிதோ வந்துவிட்டான்.

எண்ணாலே அளவிடலாம் பிறவியிதோ
எத்தனைநாள் பிறந்தழியு மிவ்வாழ்வோ?