பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பூர்ணசந்திரோதயம்-1 உமக்குத்தான் அதுபோகம் அதிகம். அதுவும் தவிர, இந்த விஷயத்தில் என் பெயர் வெளியில் வராமல் வேலை செய்ய வேண்டும். ஆகையால், இதற்குத் தகுந்த ஆள்களைப் பிடித்து இந்த விஷயத்தைப் பக்குவமாக அவர்களுக்கு நீரே சொல்லவேண்டும். என்ன சொல்லுகிறீர்?' என்றார். அதைக் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார், "நீங்கள் சொல்வதெல்லாம் நியாயமான சங்கதிதான். ஆனால், இந்த விஷயத்தில் முயற்சி செய்ய நமக்குச் சாவகாசந்தான் அகப் படாது போலிருக்கிறது. நாமெல்லோரும் சேர்ந்து ஏற்கெனவே ஒரு பந்தயம் வைத்திருக்கிறோம். நம்முடைய கவனமெல்லாம் இப்போது அந்தப் பூர்ணசந்திரோதயத்தை ஜெயிக்கும் விஷயத்தில் செல்லவேண்டியிருக்கிறது. ஆகையால், இந்த வாரம் முழுதும் கழிந்துபோனால், பூர்ணசந்திரோதயத்தின் விஷயம் ஒருவிதமாகத் தீர்ந்து போகும். உடனே நான் என்னாலான முயற்சி செய்து இவள் இருக்குமிடம் முதலிய விவரங்களைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்கிறேன். அது உதவாதென்று நீங்கள்கட்டாயப்படுத்தினால், நான் இன்னொரு ஏற்பாடு சொல்லுகிறேன். தாங்கள் அதற்கு இணங்குவதானால், நான் இன்று முதலே இந்த விஷயத்தில் முயற்சி செய்கிறேன்" என்றார். - - அதைக்கேட்ட இளவரசர், ஆறின கஞ்சி பழங் கஞ்சி ஆகிவிடும். இந்த ஒருவாரம் முழுதும் நாம் இந்த விஷயத்தைப் பேசாமல் விட்டுவிட்டால், அதன்பிறகு அசிரத்தை ஏற்பட்டுவிடும். இவ்வளவு அருமையான பெண்ணை அப்படி விட்டுவிட எனக்கு இஷ்டமில்லை. நீர் என்னவிதமான ஏற்பாட்டைச் சொன்னாலும் அதன்படி நான் நடந்து கொள்ளு கிறேன். நீர் இந்த நிமிஷம் முதலே இவளுடைய விஷயத்தில் முயற்சி செய்யவேண்டியதே முக்கியமான காரியம்' என்று நயமாக வற்புறுத்திக் கூறினார். உடனே ஜெமீந்தார் இளவரசரை நோக்கி, 'அப்படியே