பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221 கண்டு தனது அக்காளிடத்திலிருந்து கடிதம் வந்த சந்தோஷச் செய்தியையும் அதன் சாராம்சத்தையும் எடுத்துக் கூற செட்டியாரும் தமது சந்தோஷத்தை வெளியிட்டு அவளை அன்பாக உபசரித்து அவளால் கொடுக்கப்பட்டஉண்டியலுக்கும் பணம் கொடுத்து அவளை அனுப்பிவைத்தார். அப்போது அந்த பாங்கியில் மேற்படி செட்டியாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அவருக்கு ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பண்டாரம், நமது ஷண்முக வடிவு அங்கே தோன்றி செட்டியாரிடத்தில் பேசி உண்டியலுக்குப் பணம் பெற்றுக்கொண்டு போகும்வரையில் அவளை வியப்பாக உற்று நோக்கியவண்ணம் மெளனமாக இருந்தவர், அவள் வெளியில் போனவுடனே, தமக்கு நேரமாகியது என்று கூறி செட்டியாரிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் வந்தார். ஷண்முகவடிவு வீதியோடு சிறிது முன்னால் போய்க் கொண்டிருந்தவள், தற்செயலாகத் திரும் பிப் பார்க்க, காஷாய வஸ்திரம் அணிந்திருந்த ஒரு பண்டாரம் தனக்குப் பக்கமாக வந்துகொண்டிருந்ததைக் கண்டு மிகவும் கிலேசமடைந்து, பாட்டையின் ஒரு பக்கமாக விலகி நடக்கலானாள். அந்தப் பண்டாரத்தைத் தான் எவ்விடத்திலோ பார்த்ததாக ஞாபகம் உண்டாயிற்று. அவள் சிறிது ஆழ்ந்து நினைத்துப் பார்க்க, பாங்கியில் செட்டியாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்த பண்டாரமே தனக்குப் பின்னால் வருகிறவர் என்பது அவளது மனதில் உடனே பட்டது; ஒருகால் அவர் செட்டியாரிடத்தில் தமது அலுவலை முடித்துக்கொண்டு வேறே எங்கேயாவது போகிறாரோ என்ற எண்ணம் அவளது மனதில் உதித்தது. ஆகையால், அவள் அந்தப் பண்டாரத்தைப் பற்றிய நினைவை அவ்வளவோடு நிறுத்தி, வேறு விஷயத்தில் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டு நடந்தாள். தான் வீட்டுக்குப் போகுமுன், தங்களுக்கு மிகவும் அவசரமாக வேண்டியிருந்த இரண்டொரு முக்கியமான சாமான்களை