வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 263 அவர்களை அடித்துத் தவிடுபொடியாக்கி ஒட்டிவிடுகிறோம். அதைப்பற்றி நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம். நாம் சகிக்கமுடியாமல் அவ்வளவு அதிகமாக இந்தப் பெண் கத்தினால், இவளுடைய வாயை நான் இறுகப் பிடித்து அழுத்திக் கொள்ளுகிறேன். கூடத்து அறைக்குள் இவள் இருந்து கத்தினால், அந்த ஒசைஅநேகமாக வெளியில் கேட்காது. இவள் கத்துகிறாளே என்றும், அதைக் கேட்டு யாராவது வந்துவிடப் போகிறார்களே என்றும், நீங்கள் கொஞ்சமும் கவலையே கொள்ளவேண்டாம். எங்களை மீறி பல மனிதர்களோ, அல்லது பெரிய பண்ணைப் பிள்ளையோ இங்கே வந்துவிட்டாலும், கதவு உட்புறத்தில் தாளிடப்பட்டிப்பதால், அவர்கள் உடனே உள்ளே நுழைந்துவிட முடியாது. நாங்கள் எங்களால் ஆனவரையில் அவர்களை அடித்துப் போட்டுவிட்டுக் கடைசியில் ஒடிப் போய்விடுகிறோம். திருடர்கள் வந்து உங்களை அடித்துப்போட்டுவிட்டு இந்தப் பெண்ணையும் பலவந்தப்படுத்தி உபத்திரவித்ததாகச் சொல்லி ஒலமிட்டு அழுங்கள். உங்களைப் பற்றி யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்' என்றான். அவனது புத்திசாலித் தனத்தையும் சமயோசித தந்திரத்தை யும் கண்ட பண்டாரம் மிகுந்த துணிபும் குதுகலமும் கொண்டவராய், “சரி; அப்படியானால் எனக்குப் பயம் இல்லை. உங்களுடைய பக்கபலம் இருக்கையில், எனக்கு இந்தக் காரியம் எளிதாகத்தான் தோன்றுகிறது. இன்று ராத்திரி இவள் நம்முடைய வலையிலிருந்து தப்பிப் போகமுடியாது. எப்படியும் நான் என்னுடைய மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்வேன் என்பது நிச்சயம். நீங்கள் எல்லாரும் சேர்ந்து கடைசி வரையில் எனக்கு உதவி செய்து இந்தக்காரியம் திருப்திகரமாக முடியும் படி மாத்திரம் செய்து வையுங்கள். நாளைய தினம் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு 25 ரூபாய் தருகிறேன். இப்போது இவளிடத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு வந்த பணத்தையெல்லாம் ஐந்து பங்காக
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/280
Appearance