பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூர்ணசந்திரோதயம்-1 தொடர்ச்சியாக இரண்டு மூன்று தினங்கள் வரையில் வீட்டுக்கே வராமல் இருந்துவிடுவான். இப்போது இந்த இரண்டுமாச காலமாக அவன் வீட்டிலேயே குந்திக் கொண்டு கிடக்கிறான்; பெண்டாட்டியின் மேலும் அதிக உருக்கமும் கரிசனமும் உண்டாயிருக்கின்றன. நான் எங்கே போனாலும், தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலையத் தலைப்பட்டிருக்கிறான். இந்த இரண்டுமாச காலமாக என் மனமும் உங்களுடைய மனசைப் போலப் பெருத்த நரக வேதனையைத்தான் அநுபவித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்காவது அவன் வீட்டை விட்டு ஒழிய மாட்டானா என்று நானும் பார்த்துப் பார்த்துத் தவித்திருக்கிறேன். கடைசியாக இன்றைய தினந்தான் அவனும் அவனுடைய சிநேகிதர்களும் கூடிக்கொண்டு எங்கேயோ ஊருக்குப் போய் சந்தோஷமாக இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரப்போகிறார்கள் என்று உணர்ந்து இன்று காலையில் அந்தக் கடிதத்தை எழுதி உங்களுக்கு அனுப்பினேன். கீழே படுத்திருக்கும் வேலைக்காரர்கள் நீங்கள் வந்ததைக் கண்டார்களோ?' என்று கவலையோடு வினவினாள். அந்தக் கள்ளப்புருஷன், 'கீழே இருக்கும் வேலைக்காரர் களெல்லோரும் நன்றாக குறட்டைவிட்டுத் தூங்குகிறார்கள்; எவரும் என்னைப் பார்க்கவில்லை. இன்றைய காலையில் உன்னுடைய கடிதத்தைப் பார்த்த உடனே எனக்கு உண்டான சந்தோஷத்தை என்னவென்று சொல்லப்போகிறேன்! ஆனால் இந்த இரண்டு தினங்களும் இரண்டு நொடிபோல ஒடிப் போய்விடுமே யென்றும், உடனே நான் உன்னை விட்டுப் பிரிந்துபோய்விட நேருமே யென்றும், அதன் பிறகு உன்னைப் பார்க்கும்படியான இப்படிப்பட்ட சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோவென்றும் நினைத்து என் மனம் மிகவும் சஞ்சலப்படுகிறது. தொலைந்தவன் எப்போதும் திரும்பாமலே ஒரேயடியாக ஒழிந்து போகக்கூடாதா என்று நான் எத்தனை தடவை சுவாமியைக் குறித்து வேண்டிக்கொண்டேன். அவன் ஒருவேளை தனது ஏற்பாட்டை மாற்றிக் கொண்டு, ஊரை