பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 183 இருப்பதாகச் சொன்னீர்களே; அது என்ன ருஜு? எடுங்கள் பார்க்கலாம்' என்றார். உடனே பாளையக்காரர் தமது மடியில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்துச்சபாநாயகருக்கு எதிரில் வைத்து, "இதைப் படித்துப் பாருங்கள். நான் சொன்னது எல்லாம் நிஜமாக நடந்த வரலாறு தான் என்று அந்த ஹேமாபாயியின் கைப்பட ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். இந்த மாதிரிக் கடிதம் எழுதிக்கொடுப்பது அசம்பாவிதமான விஷயம். ஆதலால், ஹேமாபாயி ஆச்சரியம் அடைந்து முதலில் எழுதிக் கொடுக்க பயந்து மறுத்துவிட்டாள். நீங்கள் நான் சொல்வதை நம்பாமல் ருஜூ வேண்டுமென்று கேட்பீர்கள் என்ற எண்ணத்தி னால், நான் அவளை நயந்து உண்மையை அவளிடம் சொல்லி, இந்தக் கடிதத்தை எழுதிக்கொடுக்கச் செய்து வாங்கிக்கொண்டு வந்தேன். இதை நீங்களும் படித்துப் பாருங்கள்; மற்றவர்களும் படித்துப் பார்க்கட்டும். தேவையானால் அந்த ஹேமாபாயி யையே அழைத்துவரச் செய்து விசாரித்துப் பாருங்கள். அவள் அந்தப் பூர்ணசந்திரோதயத்துக்கு முன்பாக இருந்து கூட இந்த விஷயத்தைச் சொல்லத் தயாராக இருக்கிறாள்' என்று கூறியவண்ணம், முற்றிலும் நம்பிக்கையுடையவர் போலத்தமது ஆசனத்தில் நிதானமாக உட்கார்ந்து கொண்டார். உடனே ஜெமீந்தார் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்துப் பார்த்தார். ஹேமாபாயியினது எழுத்து அவருக்குப் பழக்கமானது ஆகையால், அந்தக் கடிதத்தின் எழுத்து அவளுடைய தாக இருக்கக் காண, அவரது மனதில் எழுந்த வியப்பு முன்னிலும் பதின்மடங்கு பெருகியது. ஒருவேளை பாளையக்காரரே அதை எழுதி ஹேமாபாயியைப்போலப் பொய்க் கையெழுத்துச் செய்திருப்பார் என்று ஜெமீந்தார் ஆரம்பத்தில் நினைத்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் உண்மையாகவே ஹேமாபாயியால் எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், அவள் வேண்டுமென்றே கட்டுப்பாடாக அதை