பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பூர்ணசந்திரோதயம்-3 என்னிடத்தில் நீங்கள் அபாரமான பிரியம் வைத்திருக்கிறீர்கள் என்பது பரிஷ்காரமாகத் தெரிகிறது. நீங்கள் என் விஷயத்தில் ஆதியிலிருந்து செய்துவரும் அபாரமான உதவிகளுக்கும் காட்டிவரும் நிகரற்ற அன்புக்கும் நான் உங்களுக்கு என்னவித மான கைம்மாறு செய்யப் போகிறேன். நான் என்னுடைய அக்காளை எப்படியும் இன்றைய தினம் பார்க்க வேண்டும்; பார்த்து இந்த வேலைக்காரியின் நிலைமையைப் பற்றிச் சொல்லுகிறேன். அவள் என்ன யோசனை சொல்லுகிறாளோ அதன்படி நடந்து கொள்ளுகிறேன். ஒருவேளை அவள் இந்த வேலைக்காரியைத் தன்னுடைய ஜாகையில் வைத்துக்கொண்டு உடம்பைச் சரிப்படுத்தி இவளைப் பின்னால் அனுப்புவதாகச் சொல்லி என்னை முன்னால் அனுப்பினால், நான் அவளுடைய வார்த்தைப்படி நடக்கத்தானே வேண்டும்” என்றாள். அதைக் கேட்ட விருந்தாளி ஸ்திரீ, 'அப்படி நீ முன்னால் போக வேண்டியது அத்யாவசியமாக இருந்தால், உன்னுடைய வேலைக்காரி இங்கேயே இருக்கட்டுமே. அவளை நான் குணப்படுத்தி அனுப்பி வைக்கிறேன். இப் படிப்பட்ட கேவலமான நிலைமையில் இவளை இங்கே இருந்து உன்னுடைய அக்காள் ஜாகைக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை' என்று கரைகடந்த அன்போடு பேசினாள். உடனே ஷண்முகவடிவு, "ஆகா! அப்படியே செய்யலாம். அவளை இங்கே வைக்கக்கூடாது என்கிற எண்ணமாவது தங்களுக்கு இது பாரமாக இருக்கும் என்ற எண்ணமாவது எனக்கு இல்லை. என் விஷயத்தில் எத்தனையோ உதவிகளைச் செய்த உங்களுக்கு இது ஒரு பெரிய காரியமல்ல. அதை எப்படியாவது சரிப்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் நீங்கள் ஒர் ஆளை அனுப்பி என்னுடைய அக்காள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கச் செய்து, அவளைப் பார்த்து, நான் வந்திருக்கும் சங்கதியைச் சொல்லிவிட்டு வரும்படி செய்தால் உடனே நான் புறப்பட்டுப் போய் அவளைப் பார்க்கலாம்' என்றாள்.