பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - பூர்ணசந்திரோதயம்-3 அனுப்பினார். ஆகையால், நான் உள்ளேபோய் உங்களைத்தேடி விட்டு வருகிறேன். தயை செய்து நீங்கள் கொஞ்சம் அவசரமாக என்னோடு வரவேண்டும். அவர் கையோடு உங்களை அழைத்துவரச் சொன்னார் என்று நயமாக மறுமொழி கூறினான். அதைக்கேட்டு, நிரம் பவும் ஆயாசமடைந்த கலியாணசுந்தரம், “எனக்கும் போலீஸ் கமிஷனருக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவர் என்னை இவ்வளவு அவசரமாக அழைக்கிறார்? என் பேரில் ஏதாவது தாவாவுண்டா? என்று கேட்டான். உடனே அந்த போலீஸ் அதிகாரி, 'உங்கள் பேரில் தாவா எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ சில விஷயங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்போல இருக்கிறது. ஆனால், எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியவில்லை; இருந்தாலும் கெடுதலான விஷயம் ஒன்றுமிருக்காது என்று நினைக்கிறேன். ஆனால், அவர் உங்களை நிரம்பவும் அவசரமாக மாத்திரம் அழைத்து வரச் சொன்னார் என்று பணிவாகக் கூறினான். உடனே கலியாணசுந்தரம், "அப்படியானால் நான் இதோ வருகிறேன். நான்தக்க பெரிய மனிதன் என்பதை ருஜுப்படுத்தக் கூடிய சில தஸ்தாவேஜுகள் என்னிடம் இருக்கின்றன. அவைகளை இங்கே நான் இறங்கியிருக்கிற விடுதியில் வைத்திருக்கிறேன்; நான் நேராக அங்கே போய் அவைகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு வருகிறேன். அதுவரையில் நீர் தயைசெய்து இப்படியே இரும். நான்போய் ஐந்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்” என்றான். போலீஸ் அதிகாரி, 'அந்தச் சிரமம் உங்களுக்கு வேண்டிய தில்லை. உங்களுடைய தஸ்தாவேஜுகளெல்லாம் இதோ என்னிடத்தில் இருக்கின்றன. ஆகையால், நீங்கள் இப்படியே திரும்பி என்னோடு வரலாம்' என்று நிதானமாக மறுமொழி கூறினான்.