வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 111 தாதி, அதையெல்லாம் நான் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் யாரென்றும் அவர்கள் உங்களை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டிய காரணமென்ன என்றும் நான் இரண்டு மூன்று தரம் கேட்டுக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் நிரம்பவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுவதாகத் தெரிகிறது. தாங்கள் சொல்லுகிறபடி செய்ய வேண்டுமென்று மாத்திரம் அவர்கள் கெஞ்சி மன்றாடி என்னிடம் கேட்டுக் கொள்ளுகிறார்களே அன்றி, தங்களுடைய வரலாறு எதையும் வெளியிட அவர்கள் தயங்குகிறார்கள். ஆகையால், நான் அவர்களை அந்த விஷயத்தில் அதிகமாக வற்புறுத்தவில்லை” என்றாள்.
கலியாணசுந்தரம் :- அவர்கள் இருப்பது தஞ்சாவூர் என்றார்களா? அல்லது, அந்த ராஜ்ஜியத்திலுள்ள வேறே ஏதாவது ஊர் என்று சொன்னார்களா?
தாதி:- தஞ்சாவூரிலிருந்துதான் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
கலியாண:- அவர்கள் தங்களுடைய பெயரைக் கூடச் சொல்லவில்லையா?
தாதி:- அவர்கள் சொல்லவும் இல்லை. நானும் அதைக்
கேட்கவில்லை.
கலியாண:- பார்வைக்கு அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எவ்வளவு வயசிருக்கும்?
தாதி:- இரண்டுபேருக்கும் சுமார் முப்பத்தைந்து அல்லது நாற்பது வயசிருக்கலாம். இருவரும் கருப்பாகவும் புஷ் டி யாகவும் உயரமாகவும் இருக்கிறார்கள். முகத்தில் அடர்த்தி யாகவும் நீளமாகவும் மீசைகளிருக்கின்றன. அவர்கள் நல்ல பலசாலிகளாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் காணப்படு கிறார்கள்.
கலியாண:- ஒகோ அப்படியாசங்கதி அவர்கள் யாரென்பது
எனக்கு ஞாபகம் உண்டாகவில்லையே! நீ குறிப்பிடும் 5.3.IV-8