பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பூர்ணசந்திரோதயம்-4 கொள்ளுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனையின்மேல் நான் அதைச் செய்யப் போகிறேன். நான் நாளைய தினமே புறப்பட்டுப் பூனாவுக்குப் போப் உண்மையைத் தெரிந்து கொண்டு ஒருவார காலத்தில் திரும்பி வந்துவிடுகிறேன். இந்தக் கடிதத்திலுள்ள சங்கதி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு மேலும் நீ ஏதாவது ஆட்சேபணை சொல்லுவாயோ என்னவோ? ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு தூரம் வாததர்க்கம் செய்யும் நீ, நான் பொய் யாகச் சொல்லுகிறேனோ என்று எண்ணினாலும் எண்ணுவாய். ஆகையால், நீயும் என்னோடு கூடவே பூனா தேசத்துக்கு வருவதே நல்லது. அவ்விடத்தில் நாம் இருவரும் ரகசியமாக - ஒரிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்துகொண்டு திரும்பி வந்துவிடுவோம். நேற்றைய தினம் இந்தக் கடிதம் என்னிடம் வந்த உடனே நான் சிலரைத் தருவித்து, பூனாவுக்கு நான்கு தாதிகள் அனுப்பப்பட்டதுண்டா என்றும், அவர்கள் யாரென்றும் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். இந்த ஊருக்கு வடக்கில் அம்மன் பேட்டையென்று ஒர் ஊர் இருக்கிறது. அவ்விடத்தில் அன்னமென்று ஒரு கூத்தாடிச்சி இருக்கிறாள். அவள், பெரிய குடும்ப ஸ்திரீ அந்த ஊருக்கே பிரபலமான பெரிய மனிஷி. அவள் எனக்கு நிரம் பவும் பழக்கம் உடையவள். அவளுக்கு நான்கு பெண்கள் இருந்தார்கள். அவர்கள்தான் பூனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்களாம். அந்தப் பெண்களும் என்னிடம் உண்மையான பயபக்தி விசுவாசம் உள்ளவர்கள். நான் பூனாவுக்குப் போய் அவர்களை அழைத்துத் தந்திரமாக விஷயங்களை விசாரித்தால் அவர்கள் எதையும் மறைக்காமல் உண்மையை எல்லாம் உள்ளபடி சொல்விவிடுவார்கள். அவர்கள் சொல்வதொன்றே நமக்குப் போதுமான ருஜூவாக இருக்கும். அதற்குமேல் நாம் எந்தக் காரியத்திலும் இறங்காமல் உடனே புறப்பட்டு இங்கே வந்துவிடலாம். அவர்கள் என்னிடம் ஒருநாளும் பொய் சொல்லக் கூடியவர்களன்று. அவர்கள் நிரம் பவும்