பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 281 இறந்துபோவது நிச்சயம். என்றென்றைக்கும் அழியாத பழிப்பும் மானஹானியும் எங்கள் வம்சத்துக்கே ஏற்பட்டுப்போகும். எல்லாம் எதனால், மகா பாவியாகிய என் வயிற்றில் இந்தக் குழந்தை வந்து தோன்றியதனால் அல்லவா? இப்படி நான் துன்மார்க்கத்தில் இறங்குவதற்கு என் புருஷனென்று பெயர் வைத்துக்கொண்டு ஊரில் திரியும் அந்த இளவரசனுடைய துன்மார்க்கமும், அசட்டையுமே காரணமல்லவா? என்மனசில் இப்போது உண்டாகும் ஆத்திரத்தில் அந்த துஷ்ட மனிதன் இங்கேயிருப்பானானால், அவனுக்கு விஷமிட்டுக் கொன்று விடவும் நான் பின்வாங்க மாட்டேன்.

மோகனராவ் :- குழந்தையை நாம் தஞ்சாவூரில் எங்கே வைக்கிறதென்பதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதில்லை. அதை நானே என்வீட்டில் வைத்து வளர்த்து வருகிறேன். என்தாயாரிடம் கொடுத்து ஏதாவது ஒரு முகாந்திரம் சொல்லிவைத்தால், அவள் சரிதான் என்று ஒப்புக்கொண்டு, குழந்தையின் ரகசியத்தை வெளியில் விடாமல் வளர்த்து வருவாள். நீ அதைப் பார்க்க ஆசைப்பட்டால், ராத்திரி காலத்தில் அதைக் கொண்டுவந்து காட்டும்படி நான் ஏற்பாடு செய்கிறேன்.

லலிதகுமாரி:- நாம் அப்படியே செய்கிறதாக வைத்துக் கொள்வோம். இந்தக் குழந்தை சம்பந்தப்படும் வரையில் நமக்கு யாதொரு துன்பமும் இல்லாமல் போகிறதென்றே வைத்துக் கொள்வோம். இனி நான் தஞ்சாவூருக்கு வந்தபிறகும், என் புருஷன் என்னைக் கவனியாமல் அலட்சியமாக விட்டிருக்கத் தான் போகிறான். நாம் இருவரும் இனி நம்முடைய ஆயுசு கால பரியந்தம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்திருக்க முடியாது என்பது என்னுடைய உறுதியான எண்ணம். ஸ்திரீகளுக்கு ஒரு குழந்தை பிறந்துவிடுமானால், அதற்கு மேல் அடிக்கடி குழந்தைகள் பிறந்துகொண்டே இருக்குமென்று தாதிகள் சொல்ல நான் கேள்வியுற்றிருக்கிறேன். அதற்கிணங்க,