பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - பூர்ணசந்திரோதயம்-4 உண்மையான சுகம் இருக்காது என்பது நிஜந்தான். ஆனாலும், நாம் இன்றையதினம் பலாத்காரம் செய்து விட்டால், அவளுடைய கற்பு குலைந்துபோகும்; நாணம் விலகிப் போகும். தான் இனிதப்ப வழியில்லையென்றும், தன்னுடைய பரிசுத்தம் எப்படியும் கெட்டுப்போய் விட்டது. ஆகையால், தான் இனி பதிவிரதைத்தனம் கொண்டாடுவதில் உபயோக மில்லை என்றும் அவள் உணர்ந்து சிலதினங்களில் படிப்படியாக ஒழுங்குக்கு வந்துவிடுவாள். சில தினங்கள் வரையிலே தான் இந்த உபத்திரவமெல்லாம் இருக்கும். அதன்பிறகு இவள் நாய்போலப் படிமானத்துக்கு வந்து விடுவாள். அதன்பிறகு நாம் தடியாலடித்துக் கணிய வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அவளே தானாகவே கனிந்து நம்முடைய பிரியப்படி நடந்து கொள்வாள். இப்படிப்பட்ட பிடிவாத குணமுடையவர்களை வசப்படுத்த பலாத்காரத்துக்கு மிஞ்சிய மருந்தே கிடையாது. இவளுடைய மனப்போக்கைப் பார்த்தால், இவளை நாம் ஆயிரங்காலம் வைத்திருந்து கனகாபிஷேகம் செய்து இவளைப் புகழ்ந்து பூஜித்தாலும் இவள் என்விஷயத்தில் தானாகக் கனிந்து வரவே மாட்டாள். இவளைப் பலாத்காரத்தினால் வென்றால் வெல்லலாம். இல்லையானால் பேசாமல் வெளியில் அனுப்பி விடுவதுதான் உசிதமான காரியம். நீ உலக அனுபவமில்லாத சிறிய பெண். அதுவுமில்லாமல் உன்னைப் போன்ற குடும்ப ஸ்திரீகளுக்கு இந்த விஷயத்தின் சூட்சுமம் கொஞ்சமும் தெரிய நியாயமில்லை. நான் பதினைந்து வயசு முதல் இந்த விஷயத்திலேயே கிடந்து உழன்று பழமும் தின்று கொட்டை யும் போட்டவன் ஆகையால், நீ எவ்வித ஆட்சேபனையும் சொல்லாமல், என் யோசனைப்படி நடந்து கொள். சீக்கிரமாகப் போ. இவள் சந்தேகிக்காதபடி நீ தந்திரம் செய்து இவளை என்னுடைய ரதிகேளி விலாசத்துக் குள் அழைத்துக் கொண்டுபோய் எப்படியாவது தந்திரம் செய்து அந்த விசை நாற்காலியில் மாட்ட வைத்துவிடு. போ” என்று நயமாகவும் அழுத்தமாகவும் கூறினார்.