எதிர்கால மன்னர்கள்
தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப
"
என்ற அறவுரையை மனத்திற் கொண்டு கல்வியிலே உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். கல்வியின் பகுதியாகத்தான் நீங்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றைப் படித்துச் சிந்தித்துத் தெளிவுபெற வேண்டும். மாணவர்களாக இருக்கும்போதே அரசியல்வாதிக ளாகிவிட வேண்டா என்றுமட்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். எதற்கும் காலமுண்டு. காலம் வரும்போது கருத்தோடு செயலாற்ற ஆயத்தம் செய்துகொள்ள வேண்டுவதே மாணவர் கடமை, மாணவர்களாக இருக்கையிலேயே அரசியல்வாதிகளாவது பிஞ்சிற் பழுப்பதாகும். அப்பழத்தின் சுவையும் பயனும் எப்படி இருக்குமென்பது நீங்கள் அறியாத தன்று.
உடலோம்பலின் இன்றியமையாமையை நான் அதிகம் வற்புறுத்தத் தேவை இல்லை. அதன் தேவையையும் சிறப்பையும் உணர்ந்திருந்தாலும், வசதிக் குறைவும் வேறு பொழுதுபோக்குக் கவர்ச்சிகளும் உடற்பயிற்சியை மறக்கச்செய்து வருகின்றன. இது பெருந் தீங்கு. " உடம்பை வளர்த்தேன் உயிர்
— 15 —