பக்கம்:பூ மணம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} 'அக்கா, அப்புறம் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு விஜயா விருட்டென்று விரைந்தாள். குறி வைத்து நோக்கிய அவன் விழிகள், அவளது விழி வெட்டின் எழிலேப் பருகின. அவன் ரசித்தான். அழகு எங்கிருந் தாலும் கலேக்கண்கொண்டு நோக்குபவன் அவன். அன்றைக்கு விஜயாவைப் பற்றிய பேச்சு, தம்பதி களின் சொப்பன சொர்க்க இன்பத்துக்கு ஒர் இடைவேளே யாக அமைந்திருக்கிறது. 率 强 零 அழகுப் பொருள்கள் என்றும் இன்பம் பயப்பன. கணவனின் அறையைச் சுத்தம் செய்து சாமான்களே அழகாக அடுக்கிவைத்தாள் பூமா. கண்ணுடி, பவுடர், வாஸ்லின், ஹேர் ஆயில்-இப்படிப் பொருள்கள் அங்கம் வகித்தன. அன்றைக்கு அலுவலகத்திற்குச் செல்லும் கணவனுக் குச் சாதம் படைத்துவிட்டு விச்சிராந்தியாகச் சற்றுநேரம் இவளியே வந்து உட்கார்ந்தாள். - அப்போது தபால்காரன் இரண்டு கடிதங்களை ஜன்னல் திரையை நீக்கி வீசிச் செல்வதை அறிந்தாள். ஒடிப்போய் கடிதத்தை எடுத்து முன்னும் பின்னும் உரையைத் திருப் பினுள். மைலாப்பூர்......சென்னே’ என்ற முத்திரையைக் கண்டதும் அவளுக்குப் புரிந்துவிட்டது. பட்டணத்தி லிருந்து மங்களம் அக்காதான் எழுதியிருக்கிருர்கள்’ என்று அறிந்தாள். படபடவென்று மேல் உரையைக் கிழித்துக் காகிதத்தைப் பிரித்தாஜ்; பார்வை பதிந்தது. கேஷமலாபங்களைத் தெரிவித்துக் கொண்டு கடிதம் எழுதவேண்டியிருந்தாள் மங்களம். கடிதத்தில் உள் ளடங்கிய வரிகள் சிலதாமே என்ருலும் ஒருவருக்கொருவர் அன்பு நலம் பரிமாறிக்கொள்ளுவதில் தானே ஆறுதல் உண்டிாகிறது! ஒன்றுக்கொன்று பல மைல்கள் தாண்டி இருக்கும் உள்ளங்களுக்குக் கடிதமே மனதிற்கு ஆனந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/96&oldid=835669" இலிருந்து மீள்விக்கப்பட்டது