பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69

போராடி அதைக் காண்பதற்கான துணிச்சலும் உயிர்த் துடிப்பும் அவருக்கு இருந்தது.

பிலடெல்பியாவில் கூடிய சுதந்திர சாசனக் கூடத்திலே அந்த புரட்சிகரமான பத்திரத்தில் கையொப்பமிடத் திரண்டிருந்த பணக்காரர்கள், சீமான்கள், ஏழைகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள் தங்கள் பெயரை அதிலே எழுதுவதற்குத் தயங்குகின்ற நேரத்திலேதான், பெஞ்சமின் ஒரு வெடிகுண்டை வீசினார்.

என்ன வெடிகுண்டு அது! இதோ அந்த குண்டின் சிதறல்கள்: “நாம் எல்லோரும் ஒன்றாகக் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்குவோம். இல்லாவிட்டால் நிச்சயம் தனித்தனியாக நாம் தூக்கு மரத்தில் தொங்க நேரிடும்” என்ற துணிவை அந்த சுதந்திரப் பிரகடனக் கூட்டத்திற்குக் கூறினார்.

பெஞ்சமின் ஃபிராங்ளினின் இந்த துணிவு போதனையை நகைச்சுவையை, வெடிகுண்டு என்று சிலர் எண்ணினார்கள். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் கடுமையை அது குறைத்தது. எல்லோரையும் தைரிய உணர்ச்சி கொள்ளச் செய்தது. இதனால், மக்கள் தளரா வீரமும் தள்ளா முடியா உணர்ச்சியும் பெற்றார்கள். ஃபிராங்ளின் பேச்சு அத்தகைய ஓர் எச்சரிக்கைக் குண்டாக தனது கருத்தை அந்த சபையிலே வெடித்தார். அதனால், அமெரிக்கப் புரட்சிக்கு விதையும் தூவப்பட்டு விட்ட ஒரு உணர்ச்சி நிலை தோன்றியது. அந்த ஒப்பந்த விடுதலை சாசனத்தில் பெஞ்சமின் தனது முதல் கையொப்பத்தைப் போட்டார்.

அமெரிக்கப் புரட்சியிலே அடியெடுத்து வைக்கும் அமெரிக்க குடியேற்ற நாடுகளிடையே போர்ப் பிரகடனம் புரிய போதுமான பொருளாதாரம் இல்லை, படைபலம் இல்லை. தேவையான பொருட்களை வாங்கிப் பயிற்சி கொடுக்க ஆயுத வகைகள் இல்லை.