பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் —* பால் ஆறிக் கொண்டேயிருக்கும். வயிறு நிரம்பிய பிறகு குழந்தை நிம்மதி அடைந்து விடும். உடனே தன் கடமை முடிந்து விட்டது என்று தாய் சும் மா இருந்து விடக் கடாது. அதிகம் சுரந்து மார்பகத்தில் இருக்கும் பாலானது, முழுதும் வந்து விட்டதா என்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். பாலூட்டிய பிறகு, மார்பகத்தில் பால் இலலாத வண்ணம், வெறுமையாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். கனம் குறைந்தால் சரிவு ஏற்படாதல்லவா! அத்துடன் மார்பத்தை பக்குவமாகப் பிடித்து விடல் (Massage) வேண்டும். குனிந்தபடி நிற்பது, முதுகை வளைத்த படி நிற்பது, குனிந்தவாறே உட்கார்ந்திருப்பது, வில்லாக முதுகை வளைத்தபடி நடப்பது போன்ற கூன் விழுந்த நிலையில் இருக்கும் போது, மார்பகங்கள் தங்களது இறுக்கத்தை இழந்து விடுகின்றன. அத்துடன் நில்லாமல், நீண்டு போகவும், தொய்வு பெற்று விடவும் செய்கின்றன. ஆகவே, பெண்கள் குனிந்த நிலையில் நிற்காமல், உட்காரமல், நடக்காமல் நேர்கொண்ட நிலையில் இருக்கப் பழகிக் கொள்வது மிக மிக அவசியம். இயற்கையாகவே, நல்லதுங்கூட. இவ்வாறு நிமிர்ந்திருப்பதால் பல நன்மைகளும், கிடைக்கின்றன. தோள்பட்டையை பின்னால் நிமிர்த்தி LD fTTGAES) I j விரித்து, நிமிர்ந்து இருக்கும் போது, மார்பகத் திசைகள் பக்கவாட்டில் விரிகின்றன. மார் புத் திசைகளின் திகதி தன் மார்பகத் தைப் பின் புற மாக "லிமையுடன் இழுத்துக் கட்டிக் காக்கின்றன.