பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா இெேடுத்தி வைத்திருக்கும் இறந்த பழக்கம், எடுப்பான மார்பை இன்னும் எடுப்பாகக் காட்டுவதோடு, எந்நாளும் எழிலார்ந்த கோலத்தில் வைத்திருக்கவும் உதவுகிறது. நாள் முழுதும் மேற் கூறிய வழியைப் பின்பற்ற வேண்டும். தூங்கி எழுந்திருக்கும் போதே மல்லாந்து படுத்த வண்ணம் மார்பை அகலப் படுத்தி, நன்றாக மூச்சை இழுத்து வெளியே விட்டு, மார்புக்கான இப்பயிற்சியைப் பலமுறை செய்யவும். நாள் முழுதும் இயல்பாக செய்யக் கூடியதான நிற்றல், நடத்தல், உட்காரல் போன்றவற்றிலும், மற்ற செயல்களில் ஈடுபடும் போதும் நிமிர்ந்த தோள்களுடன் உயர்த்திய மார்புள்ள நிலையிலே இருத்தல் அவசியம். நன்றாக மூச்சை இழுத்து விடுவதால் மார்பகத்திற்கு என்ன பயன் என்று கேட்டால், ஆழ்ந்த மூச்சிழுத்தல் என்பது தேவைக்கு மேலே அதிகமான காற்றை சுவாசித்து, நுரையீரலுக்குள் அனுப்பி விட்டு பிறகு வெளிவிடுவதானது, இரத்த ஓட்டத்தை இன்னும் விரிவு படுத்தவும் விரைவு படுத்தவும் செய்யும். எந்த பாகங்கள் அதிகமாக இயங்குகின்றனவோ அந்த பாகத்திலுள்ளதிசுக்களுக்கு அதிக இரத்தம் பாயும். அதே போல, மார்புத் தசைகள் விரிந்து சுருங்கி சுருங்கி விரிய, இரத்தம் அங்கே அதிகமாகச் செல்வதால் மார்பகத்தில் நிறைந்திருக்கும் திசுக்கள் அதிகமான பயனை அடைகின்றன. அத் திசுக்கள் செழிப் பாக வளரும் போது மார்பகம் செழுமையடைந்து பூரித்து நிற்கின்றன.