பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கு நிலத்தில் பயணம் செய்ய அனுமதிக்காதவர்களும் உண்டு!

இந்த நூலில், எஸ்.எஸ். இராஜேந்திரன், நெடுஞ்செழியன், எம். ஜி. ஆர். செழியன் போன்றவர்களைப் பற்றிய குறிப்பு குறிப்பாக இடம் பெற்றிருக்கிறது. மறைத்திருக்கலாம். மறைத் திருந்தால் அவர் தென்னரசாக உயர்ந்திருக்க முடியாது.

இந்த நூலில் வழக்கு' என்ற தலைப்பில் நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர்கள் வாதாடிய விதம், திறமை ஒளிசிந்துகிறது

காலில் விழுந்த கலெக்டர்' என்ற தலைப்பில் தரும் சேதிகள், புதுமையின் பாற்பட்டதல்ல. அது ஒரு தொடர்கதை' கலெக்டர் மட்டுமல்ல, சில உயர்தர அதிகாரிகளும் அடக்கம். இப்போது, கலைஞர் மீண்டும் முதலமைச்சரானதற்குப் பிறகு, துல்லியமான மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்மான உணர்விற்குத் தனிமரியாதை ஏற்பட்டிருக்கிறது.

தென்னரசு அவர்களுக்கு வயது அறுபத்தி இரண்டு இளைஞர் ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு, -

“A man is as old as he feels, a woman as old as she looks.

"மனிதன் முதுமை பெற்றவகிைருன், அவன் அப்படி எண்ணும் போது, மங்கையோ, அவளது தோற்றத்தில்.’

х வாழ்க்கையில் விரக்தியடையாத குறிப்பிட்டவர்களில் தென்னரசு ஒருவர். அவரது நம்பிக்கை, திருப்திப்ப்டு, கடலில் போதுமான அளவு மீன்கள் உள்ளன என்பதே!

கலைஞரின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் தென்னரசு அவர்கள். அது இலட்சியப் பிடிப்பு காரணமாக, இதய ஒற்றுமையின் அடிப்படையில்.

எனது நன்றி தென்னரசிற்கு. நிகழ்காலத் தம்பிமார் களுக்கும், வருங்கால இளந்தளிர்களுக்கும்! கட்சியில் யார், எப் படிப் பட்டவர், அவர்தம் சாதனை இவைகள் இடம் பெற்றிருக் கின்றன. இந்நூலில். சரித்திரத்தை, சதிக்கு ஆளாக்கமுடியாது. வாழ்க தென்னரசு ஆல்ை ஒரு கேள்வி, பெண்ணில்லாத ஊரிலே குடியிருப்பது நன்ருே? குடியிருக்கத் துணிந்துவிட்ட தென்னாசிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆலுைம் ஒரு மகிழ்ச்சி இது தலைப்புதானே தவிர, தலையங்கம் அல்ல. '

  1. .

ஒள