பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய போது ஊ ரு க் கு நான்கு பேர்கள்தான் அன்றைக்கு இருப்பார்கள். ஒவ்வொரு ஊரையும் குறிப்பிடும்போது மாயவரம்என்ருல் நடராஜன் என்றும்-கும்பகோணம் என்ருல் கே. கே. நீலமேகம் என்றும் மதுரை என்ருல் முத்து என்றும்திருச்சி என்றல் அன்பில்-என்றும் - மன்னர்குடி என்ருல் மன்ன நாராயணசாமி என்றும் இப்படி ஒரு ஊர்ப் பெயரைச் சொன்குல் அந்த ஊரில் ஒருவர்தான் ஞாபகத்திற்கு வருவார் என்ற அளவிற்குத்தான் சுயமரியாதை இயக் கம் ஒரு காலத்திலே வளரத்தொடங்கியது. அரும்பத் தொடங்கிய து அந்த அரும்பு இன்றைக்கு அரசியல் மலராக முகிழ்த்திருக்கின்ற இந்த நேரத்தில் மணம் விசுகின்ற இந்த நேரத்தில் - இந்த இயக்கத்திலே உள்ள அத்தனை பேருமே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அழுத்தந் திருத்தமாக பின்பற்றுகின்ற வர்கள் என்று சொல்லிவிட முடியாது.

ஒன்றை நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். ஒரு முறை மதுரை முத்து அவர்கள் சென்னையில் கழக அலு. வலகக் கட்டிடத்தில் பேசிக் கொண்டிருந்தபோது (அவர் தீவிர மான சுயமரியாதைக்காரர்) தலைவர் அவர்களே உங்களைக் கேட்கிறேன். சுயமரியாதைக்காரர்களுக்கு இந்த இயக்கத்தில் என்ன இடம்? என்று கேட்டார் அதற்கு நான் தி.மு கழகத்திலே சுயமரியாதைக்காரர்களுக்கும் இடம் உண்டு என்று சொன் னேன். அதனுடைய உட்பொருளை அவர் புரிந்துகொண்டார். எனவே தி.மு. கழகத்திலே உள்ள சுயமரியாதைக் கொள்கையை அவரவர்களும் தனிப்பட்ட முறையிலே பின்பற்றுகின்ற நிலை. இன்றைக்கு இருக்கின்றதே அல்லாமல் அந்த சுயமரியாதை எண்ணம் - சுயமரியாதைக் கொள்கை - கடவுளைப் பற்றிய கொள்கை வேறு பல கொள்கைகளை யாரிடத்திலும் திணிப்பது என்பது இல்லை. . - • N. . .

சுயமரியாதையிலே ஈடுபாடு கொண்ட-பகுத்தறிவு இயக் கத்திலே ஈடுபாடு கொண்ட ஒரு பெரும் கூட்டம் தி.மு. கழகத் திலே இருந்தாலும் கூட - தி. மு. கழகத்திலே ஆதரவாளர் களாக இருக்கின்ற பல பேர் வைதீகப் பற்றுள்ளவர்களாக இருக்கின்றர்கள். அவர்கள் ஆலயங்களுக்குச் சென்று அங்கே தான் ஆண்டவன் இருப்பதாக எண்ணி வழிபடுகின்றவர்களாக இருக்கின்ருர்கள். நாமோ ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணக் கூடியவர்கள். பேரறிஞர் அண்ணு அவர்க ளின் கொள்கை வழிப்படி நடப்பவர்கள். எனவே ஏழையின் சிரிப்பிலே தான் இறைவன் இருக்கின்ருன் என்று எண்ண்க்கூடியவர்கள்:

133