பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவர் கலைஞர் அவர்களிடம் நீங்காப் பற்றுக் கொண்டவர். தலைவர் கலைஞர் அவர்களுக்கும் தினகரனிடத்தில் நல்ல பிரியம் உண்டு! இவரது தணியாத முயற்சியால்தான் இந்த நூல் வெளிவருகிறது. எனது சோம்பேறித்தனத்தை முறியடித்து வெற்றி கண்டவன் நண்பர் தினகரன்

நண்பர் தினகரன் தலைவர் கலைஞரின் எழுத்துக்களையெல்லாம் நகைப்பெட்டியைப்போல் கவனமாகக் கண்காணிப்பவர். அத்தகைய இனிய நண்பர் எனது எழுத்துக்களைச் சேகரித்து நூலாக்கிட முனைந்து சாதனை புரிந்தது நான் எதிர்பாராதது! அவருக்கு என் நன்றி! அவருக்கு ஒத்துழைத்த அவரது நண்பர்களுக்கும் என் நன்றி! வணக்கம்

அன்பன்

எஸ். எஸ். தென்னரக