பக்கம்:பெண்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை 101

இன்று பிறந்த பாட்டுக்கள் பெண்கள் நிலையை எவ். வளவோ உயர்த்தி விட்டன.

மங்கையராகப் பிறப்பதற் கேநல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா !-பெண்கள் பங்கயக் கைங்கலம் பார்த்தல்ல வோ இந்தப்

பாரில் அறங்கன் வளருதம்மா ! என்ற அந்த அளவுக்கு நாட்டில் பெண்களே முன்னுக்குக் கொண்டுவரும் புது முயற்சியில் புலவர்கள் பாடுபட வந்துள்ளமை கண்டு பெண்கள் மகிழத்தான் செய்கிருர் கள்! இன்னும் ஒரு புரட்சிக் கவிஞர் பெண்களை எவ்வளவு உயர்த்த வேண்டுமோ அந்த அளவுக்கு ஏட்டிலே உயர்த்துகின்ருர். நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகள் அத்தனையும் பெண்களே முன்னுக்குக் கொண்டு வந்தால்தான் நாடு உண்மையில் உயர்வு பெறும் என்று பேசுகின்றன. ஆல்ை, அவற்றின் வாய்ச் சொல்லுெல்லாம் செயலில் மட்டும் நன்கு சிறக்கக் காண்வில்லை. செயலில் சிறப்பது உண்மையானல், அவர்கள் உடனே கிராமங் களுக்குச் சென்று, அங்கு உள்ள மக்கள் சமுதாயத்தை மாற்றி அமைத்து, அங்குப் பெண்கள் விடுதலையைக் காண முற்பட வேண்டும்.

அனைத்துக்கும் மேலாகப் பெண்களுக்கு இருக்கும் அந்தப் பரந்த உளப்பான்மை வேறு எந்து ஆடவருக்கும் இல்லையே ஆடவர் உலகம், சாதி யென்றும் சமய மென்றும் பல்வேறு வகையில் வெறி பிடித்துத் தன் பெயர்க்குப் பின் சாதியையும் சமயத்தையும் குறிக்கும் பட்டங்களையும் பிறவற்றையும் பொருத்தி மகிழ்ந்து, மற்றவர்களுக்குத் தீங்கிழைக்க நினைப்பது போன்று, பெண்ணினம் என்ருவது நினைத்ததுண்டா ? எந்தப் பெண்ணுக்காவது தன் பெயருக்குப் பின் சாதியையோ சமயத்தையோ குறிக்கும் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/104&oldid=600954" இலிருந்து மீள்விக்கப்பட்டது