பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டு ரூபாயில் படித்தவர் 47 சாப்பாடு சாப்பிடுவதும் அந்த எட்டு ரூபாயில் தான் சட்டை, வேட்டி வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான் புத்தகங்கள் வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான்! தானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தான். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுவான். மற்ற வேளைகளிலெல்லாம் பட்டினிதான் ! இரவில் படிப்பதற்கு எண்ணெய் வாங்க முடி யாது. ஆகையால், தெரு விளக்கின் அடியிலே உட்கார்ந்து பாடம் படிப்பான். தெரு விளக்கிலே படித்தாலும் தன்னுடைய பதினெட்டாம் வயதி லேயே பி. ஏ. பட்டம் பெற்று விட்டான் தெரு விளக்கில் படிப்பதைப் பற்றிச் சொன்னதும், உங்களுக்கு, சர். டி. முத்துசாமி ஐயர் ஞாபகம் வருகிறதல்லவா? வரும்; வரும். இந்தப் பையனும் பிற்காலத்தில் சாதாரண மனிதனுக இருக்கவில்லை. சிறந்த அறிஞர்|உயர்ந்த தலைவர்; பெரிய இராஜதந்திரி; நல்ல பரோபகாரி என்றெல்லாம் பு க ழ ப் ப ட் ட கோபாலகிருஷ்ண கோகலேதான், தெரு விளக்கில் படித்த அந்த ஏழைப் பையன்! 炒 גס Q。 6% 众檬 அன்று கோகலேயின் பள்ளி ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து, 'பிள்ளைகளே, நாளை வரும் போது இந்தக் கணக்கைப் போட்டுக்கொண்டு வர வேண்டும். சரியாகப் போட்டுக்கொண்டு வர வேண்டும். இல்லையேல் உங்களை கன்ருகத்