பக்கம்:பெரியோர் வாழ்விலே-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

需翁 பெரியோர் வாழ்விலே வேண்டும் என்ற எண்னத்துடன் சிர மப்பட்டுப் படிக்க வைத்தார். ஆனால், பாவம், அவன் சிறுவனுக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்!

  • அப்பா இறந்து விட்டார். இனி, கம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான். ஏதேனும் ஒரு வேலையில் சேருவதைத் தவிர வேறு வழி யில்லை’ என்று எண்ணினுன் அந்தப் பையன். பல இடங்களில் வேலைக்கு முயன்ருன்.

இதைப் பார்த்தார், அந்தப் பையனுடைய அண்ணு. அவருடைய மனம் கலங்கியது. 'தம்பிக்கு நல்ல அறிவு இருக்கிறது. கன்ருகப் படிப்பு வருகிறது. அவன் இந்தச் சிறிய வயதி லேயே வேலையில் சேர்ந்தால் படிப்புப் பாழாகி விடும். எப்படியும் அவனைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்துவிடவேண்டும்’ என்று எண்ணினர். ஆணுல், அப்போது அவரும் வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்தார். எங்கெங்கோ அலைக் தார். கடைசியாகப் பதினைந்து ரூபாயில் ஒரு சிறு உத்தியோகம் அவருக்குக் கிடைத்தது. உடனே, தம்பியை மேல் படிப்புக்கு அனுப்பினர். தமக்குக் கிடைக்கும் பதினைந்து ரூபாயில், தம்பியின் படிப்புக்காக மாதா மாதம் எட்டு ரூபாய் அனுப்பி வைத்தார். கமக்கு ஒரு சட்டை தைப்பதென்ருலே எட்டு ரூபாய் போதாது! ஆனால், அவன் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டுவதும் அந்த எட்டு ரூபாயில்தான் !