பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் 2ア நெருங்கிப் பழகியவன் நாயன்மார் வரலாறுகளை அவர் வாயிலாகவும் பின்னர் அவர் செய்த பெரிய புராண வாயிலாகவும் தெளிவாக அறிந்தவன் என்பன உணரலாம். அவன் அரசனான பின்னர்த் தன் பெயர் கொண்டு சுட்டிய பெருங்கோவிலில் சிவபிரான் இறையிடத்துப் புறச்சுவரில், அவ்விறைவனையே பாடித் தொழுது முத்தி அடைந்த நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளைச் சிற்பங்கள் வாயிலாக உலகத்திற்கு உணர்த்தினான் என்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இச்சிறப்புடைய செயலை நோக்கப் பெரிய புராணம் இரண்டாம் இராசராசன் காலத்திற்றானே மக்களிடம் பரவத் தொடங்கியதென்று ஒருவாறு நம்பலாம்.' ஒற்றியூர்க் கல்வெட்டு மேற்சொன்ன முடிபை அரண்செய்வதுபோலத் திருவொற்றியூர்க் கல்வெட்டு ஒன்று காண்கிறது. அஃது இரண்டாம் இராசராசற்குப் பின்வந்த இரண்டாம் இராசாதிராசனது (கி.பி. 1164-1182) ஒன்பதாம் ஆட்சியாண்டில் (ஏறத்தாழக் கி.பி. 174இல் வெளியிடப் பெற்றதாகும். அதனில், “திருப்பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தினன்று. மடத்துத் தலைவரான சதுரானன பண்டிதர், காபாலிகரது சோமசித்தாந்தத்தை விரித்த வாகீசப் பண்டிதர், இரண்டாம் இராசாதிராசன் முதலியவர்கட்குமுன் படம்பக்க நாயக தேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தது ஆளுடைய நம்பி பூரீ புராணம் கேட்டருளா நிற்க...” “ என்னும் அரிய செய்தி காணப்படுகிறது. 'ஆளுடை நம்பி’ என்பது சுந்தரர் பெயர். எனவே, அவரைப்பற்றிய புராணமே கோவிலில் படிக்கப்பட்டது என்பது தெரிகிறது. மக்கள் கேட்கத்தக்க நிலையிலும் கோவிலில் விளக்கமாக வாசிக்கத்தக்க முறையிலும் சுந்தரர் வரலாற்றைக் கூறுவது பெரியபுராணம் ஒன்றேயாகும். மேலும் சுந்தரர் வரலாறு கூறும் வடமொழி நூலோ வேறு தமிழ் நூலோ சேக்கிழார்க்கு முன் இருந்தது என்று கூறச் சான்றில்லை யாதலின் திருவொற்றியூர்க் கோயிலில் படிக்கப்பட்டது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமெனக் கோடல் பொருத்தமாகும்.