திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 耳95
அந்த நாயனார் சீகாமரப் பண்ணில் இந்தத் தலத்தைப் :பற்றிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
மண்புகார் வான் புகுவர் மனமிளையார் பசியாலும் கண்புகார் பிணியறியார் சுற்றாரும் கேட்டாரும் விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித் தண்புகார்ச் சாயக்காட்டெம் தலைவன்தாள்
சார்ந்தாரே...'
இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு:
அரணிலா வெளிய நாவல்
அருநிழ லாக ஈசன் வரணிய வாகித் தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்ன னாக்கித் தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே."
இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:
விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும்
வியன்துருத்தி வேள்விக் குடியார் போலும் அண்ணா மலையுறைஎம் அண்ணல் போலும்
அதியரைய மங்கை அமர்ந்தார் போலும் பண்ணார் களிவண்டு பாடி ஆடும்
பராய்த்துறையுள் மேய பரமர் போலும் திண்ணார் புகார்முத் தலைக்கும் தெண்ணித்
திருச்சாய்க்காட் டினிதுறையும் செல்வர்
- தாமே." பிறகு வரும் 122-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:
அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஆகாயத் தின் அளவும் உயரமாக உள்ள சாயாவனேசுவரருடைய