பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 22ぶ。

மிடற்று-அவர்களுடைய தொண்டைகளிலிருந்து எழும்: ஒருமை பன்மை மயக்கம். இசை-இசைப்பாடல்களும்; ஒருமை பன்மை மயக்கம். ஒன்றி-ஒன்றாகச் சேர்ந்து. வாழி:அசை நிலை. திருத்தோணி உளார்-சீகாழியில் உள்ள பிரமபுரீ சருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் விளங்கும் அழகிய தோணியில் வீற்றிருப்பவராகிய தோணி யப்பருக்கு. உளார்:இடைக்குறை. மருங்கு-பக்கத்தை. அணையும்-சென்று சேரும். மாட்சியினை-பெருமையை. த்: சந்தி. தாழும்-தொங்கும். இரு-இரண்டு. சிறை-சிறகுகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பறவை-பருந்து களுடன், கழுகு, காக்கை, கொக்கு, நாரை, மைனாக்குருவி, கிளி, பஞ்சவர்ணக்கிளி, மரங்கொத்திப்பறவை, மீன் கொத்திப்பறவை, சிட்டுக்குருவி, ஊர்க்குருவி, செம்போத்து, துரக்கணாங்குருவி முதலிய பறவைகள்; ஒருமை பன்மை மயக்கம். படிந்த-படிந்துள்ள தனி-ஒப்பற்ற வீசும்பிடைஆகாயத்தில். நின்று-நின்று கொண்டு. ஏழிசை-சரி, க,ம,ப,த, நிச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற சங்கீதத்தைப் பற்றிய நூல்-சாத்திரத்தில் தேர்ச்சி பெற்ற. கந்தருவர். கந்தருவர்களும்; ஒருமை பன்மை மயக்கம். விஞ்சையரும்வித்தியாதரர்களும்; ஒருமை பன்மை மயக்கம். எடுத்துதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய புகழை விரிவாக எடுத்து. இசைத்தார்-பாடினார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு வரும் 137-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'எண்ணுவதற்கு அருமையாக விளங்கும் சீர்த்தியைப் பெற்றவரும், சீகாழியில் உள்ள பிரமபுரீசர் ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் அழகிய தோணியில் வீற்றிருக்கும் அடியேங்களுடைய தலைவனாகிய தோணி யப்பனுடைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளைப் புகழ்ந்து பண்கள் அமைந்த தம்முடைய யாழில் சங்கீதம் சேர்ந்து அமைய அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான தாயனார் தம்முடைய யாழை மீட்டி