பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவதாக வருவது கண்ணப்ப நாயனார் புராணம். அதில் உள்ள முதற்பாடலின் கருத்து வருமாறு:

"பகைவர்களாகிய தாரகாட்சன், வி த் யு ன் ம | லி,

வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்குரிய பறக்கும் கோட்டைகள் ஆகிய மூன்று புரங்களை அழித்த, இடப வாகனத்தை ஒட்டுபவரும், வேதங்களின் உண்மையைப் பாதுகாப்பவரும். ஆகிய காளஹஸ்தீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சீகாளத்தியில் இறைவனை வழிபட்ட கண்ணப்ப நாயனாருடைய அழகிய நாடு நாவலர் களாகிய கவிஞர்கள் புகழ்களை எடுத்துக் கூறி வாழ்த்தும் நல்ல வளங்கள்.பெருகி நிலைத்து நின்ற நீர்ப்பூக்கள் மலர் கின்ற வாவியும், பூம்பொழிலும் சுற்றி விளங்கும் பொத்தப்பி நாடு என்று சான்றோர் கூறுவர். பாடல் வருமாறு: -

மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்

காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருகா டென்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் கல்வளம் பெருகி கின்ற

பூவலர் வாவி சோலை சூழ்ந்தபொத் தப்பி நாடு. ’’

மேவலர்-பகைவர்களாகிய தாரகாட்சன், வித்யுன்

மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய; ஒருமை பன்மை மயக்கம். புரங்கள்-பறக்கும் கோட்டைகளா கிய மூன்று புரங்களை. செற்ற-அழித்த. விடையவர்.இடப. வாகனத்தை ஒட்டுபவரும். வேத-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். வாய்மை-- உண்மையை. க், சந்தி, காவலர்-பாதுகாப்பவருமாகிய காள ஹஸ்தீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்.