பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

கேட்க முடியும் என்பது இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பு. இதே உண்மையைத்தான் திருமறையும் தெளிவாக ‘மறுமையில் மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் அவனுடைய உடல்தோறும் பேச ஆரம்பிக்கும்’ எனக் கூறுகிறது.

இவ்வாறு, விஞ்ஞான நுட்பத்தின் அடிப்படையில் இறைமார்க்கமான இஸ்லாம் அமைந்துள்ளது என்பதை, பெருமானாரால் வளர்ச்சிக்கு வழி கோலப்பட்ட விஞ்ஞான உண்மைகளே எண்பித்து வருகின்றன என்பது அறிவுக்கு விருந்துட்டும், நெஞ்சினிக்கும் செய்தியாகும்.

நன்றி: தமிழ் முஸ்லிம் ஜமாத் தகவல் மடல் (சிங்கப்பூர்)