உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரிகள் குலை நடுக்கம் ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியிலே சென்னை மாகாண முதலமைச்சர் அசெம்பிளிக்கும், விருதுநகரின் விசித்திர மனிதர் காமராசர் பார்லிமெண்ட்டுக்கும் காங் கிரஸ் அபேட்சககர்களாக நிற்கும் தொகுதியிலே காங் கிரஸ்காரர் ஒரு மாநாடு கூட்டினார்கள். இதற்கு மந்திரி மார்கள் வந்து பேசுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டு, அமைச்சர் பரமேசுவரன் உட்பட, குமாரசாமி ராஜா, பெருமாள்சாமி ரெட்டியார் போன்ற அமைச்சர்கள் அங்குச் சென்றிருந்தனர். ஆனால் மாநாடு கூட்டியவர்கள் கலைவாணர் நகைச் சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 'நான் கண்ட ரஷ்யா, என்னும் வில்லுப் பாட்டைக் கேட்டு மகிழந்து அறிவைப் பெருகிக்கொள்ள விழைந்து அவரையும் மாநாட்டுக்கு அழைத்திருந்தனர். கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் தம் குழுவினருடன் மாநாட்டிற்கு வந்து தம் வில்லுப் பாட்டைத் துவக்கி விட்டார் என்பதை அறிந்தவுடன், அமைச்சர்கள் எவரி டமும் சொல்லிக் கொள்ளாமல் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் நழுவி விட்டனர் என்று ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. இச்செய்தி உண்மையாயின், இதை விட மானங்கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/17&oldid=1706257" இலிருந்து மீள்விக்கப்பட்டது