பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பெரும் பெயர் முருகன்

முன் இயற்கை வளம் பொருந்தியிருந்த தென்றும், மதுரை வாசிகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக வந்து முருகனை வழி பட்டார்களென்றும், கோயிலில் சித்திர மண்டபம் முதலிய பல மண்டபங்கள் இருந்தன என்றும், முருகனைப் பலவகை யில் வழிபட்டுக் காணிக்கை நேர்ந்து பிரார்த்தனே செய்து ஆடிப்பாடி அன்பர்கள் போற்றினர் என்றும் அறியலாம். ஆறுபடை வீடுகளுள் முதலாவதாகிய இத்தலம் இன்றும் தமிழ் மக்களால் வழிபடப் பெற்று வருகிறது. அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் பல இத்தல்த்துக்கு இருக்கின்றன. தென் பரங்குன்றிற் பெருமாள் அன்றும் தமிழ் மக்களுக்கு அருள் செய்து கொண்டு விளங்கினன்; இன்றும் அப்படியே விளங்குகின்றன்.