இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்
45
இயற்கைக் காட்சியை நன்றாக ரசித்துக் கொண்டிருக்கலாம்” என்று கூறினார் ஷா.
“ஏழைகளைக் கொள்ளை அடித்து முதலாளிகள் வாழ்கிறார்கள். கொள்ளைக்காரர்களோ, பணக்காரர்களைக் கொள்ளையடித்து வாழ்கிறார்கள். இவர்களில் யார் மேல்?”
“இப்பொழுது நாம் வரவர எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்துவருகிறோம் அல்லவா?” என்று ஷாவிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்டார்.
“முன்பெல்லாம் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால், இப்பொழுது அதை மாற்றி, டாக்டரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று பதில் அளித்தார் ஷா.
பெரிய செல்வந்தர்கள் பலர், லண்டனில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலுக்கு வந்து குவிந்துகொண்டு இருந்தார்கள்.