பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கொள்ளவேண்டும். மர்மக்குறியும் முலைக்காம்புகளும் சுத்தமாக இருக்கவேண்டும்.

வயிறு பெருக்கத் தொடங்கும் நிலையில், புடவைகளை வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகவே, இவ்விஷயத்தில் ஜாக்கிரதை யுடன் இருக்கவேண்டும்.

தொடக்கத்தில் கூறப்பட்ட சத்துமிக்க ஆகாரவகை களை அளவுடன் உண்டு வந்தால்தான் பிரசவ த் தருணத்தில் நல்ல பலன் யாதொரு சிரமமும் இன்றிக் கிட்டமுடியும். ரத்தக் குறைவு ஏற்பட்டாலோ, அல்லது ரத்தம் கெட்டுவிட்டாலோ, இந்நிலையில் ஏதாவது விபத்து சம்பவித்தாலோ, கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நல்ல உழைப்பும் உலாவுதலும் ஒய்வும் உறக்கமும் வழக்கம்போலத் தொடரவேண்டும். காற்ருேட்டமிக்க இடங்களிலோ பூங்காக்களிலோ காலையிலும் மாலையிலும் உலாவுதல் நல்ல உடற்பயிற்சிக்குச் சமம். அளவுடன் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. பிரசவ சமயத்தில் வெகு இலகுவாகப் பிரசவமாகிவிடும். ஆனல் அவ்வளவு அக்கறை யாருக்கு இப்போது இருக்கிறது?என்ருலும், உலாவும் வழக்கம் நல்லதொரு உடற்பயிற்சி தானே! இதல்ை ரத்த சுத்தியும் ரத்த ஓட்டமும் செம்மைப் படும். தூயகாற்று கர்ப்பிணிகளுக்கு அருமருந்து! w

கால்பாதங்களின் வலி தொடரும். விளக்கெண் ணெய் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

இரவில் நல்ல பசும் பாலில் குங்குமப்பூ கலந்து

உட்கொண்டால், குழந்தை நல்ல நிறத்துடன் பிறக்கும். என்பது விஞ்ஞான உண்மை!