பக்கம்:பொங்கற்பரிசு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கார்தந்த அரிசி ஆப்பால்
கழைதந்த கட்டி ஏலம்
நீரொடு வழிந்து பானை
நெடுகிலும் பொங்கல் பொங்க !
ஊரினில் இல்லம் தோறும்
’பொங்கலோ பொங்கல்’ ஒசை
ஆர்ப்பினில், அடடா! உள்ளம்
அடைகின்ற மகிழ்ச்சி என்னே!3


நாடெலாம் இன்பம்! வண்ண
நறுமலர் பூக்கப் பச்சைக்
காடெலாம் இன்பம்! ஆற்றங்
கரையெலாம் இன்பம்! கொல்லை
மேடெலாம் இன்பம்! வான
வெளியெலாம் இன்பம்! பெண்கள்
ஆடலும் பண்ணும் கேட்க
இன்பத்தை அடையும் விடே4


வழங்கினர் வரிசை; வாழ்த்து!
தமிழர்கள் ஒன்றாய்க் கூடி,
’அழிந்ததாய் எண்ணும் இன்பத்
தமிழகம் அடைவோம்' என்றே
முழங்கினர் பகைப்பு லத்தார்
முகம்சோர்ந்தார்! ஆண்டோர் முன்னாள்
இழந்ததை மீண்டும் பெற்றே
இன்பத்தில் திளைக்க நீடே!5

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/10&oldid=1149018" இலிருந்து மீள்விக்கப்பட்டது