பக்கம்:பொங்கற்பரிசு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இளங்கதிர் பூத்தது!


பொன்னேர் தொடுவான் இளங்கதிர்

பூத்தது! பூத்ததைப்பார்!
தன்னே ரிலாத தனித்தமிழ்
வாழ்த்தொலி பொங்கலோசை
முன்னே எழுந்தது! வீட்டில்,
வெளியில் இசைமுழக்கம்
பின்னே எழ,எழும் மக்களின்

நெஞ்சில் பெருமகிழ்வே !

1


கன்னற் சுவைமிகு கட்டியாம்

வெல்லக் கலப்பினோடு
செந்நெற் சுவைமிகு பச்சை
அரிசி தெரிந்தெடுத்தே
பின்னற் சடையார் இறக்கிய
பொங்கற் பெருஞ்சுவையை
மின்ன லிடையார் அளிக்க

வியந்தனர் காளையரே !

2


தேடினர் வந்தார்; குடிசையில்

குந்தித் தமிழகத்தைப்
பாடினார் கேட்டார் ; பரிதியை
வாழ்த்தினார்; பாட்டிசையில்
ஆடினார் பொங்கல் அருந்தினார்;
கன்னி அருந்தமிழைச்
சாடினார் சீறித் தமிழ்மொழி

காக்க எழுந்தனரே!

3

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/58&oldid=1147458" இலிருந்து மீள்விக்கப்பட்டது