உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வைச் சொன்னால், அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.! தயவுசெய்து இப்போது சொல்லவேண்டாம்! என்று கூறினான். முதலியாரும் சங்கர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போலத் தலையசைத்தார் என்றாலும் அடக்க முடியாத வேதனையுடன் தனது கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். உடை மாற்றிக் கொள்ளப் போன குப்பாயியை இன்னும் காணவில்லையே! என்னுடன் இப்போதே அரண்மனைக்கு வருகிறாளா? பிறகு வருகிறாளா? தெரியவில்லையே!' என்று சங்கர், முதலியாரைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே வீட்டின் உட்புறமாகத் திரும்பிப் பார்த்தான். அப்போது வீட்டுக் குள்ளிருந்து ஒரு வேலைக்காரி தலைவிரிகோலமாக முன் கூடத்தை நோக்கி ஓடி வந்தாள் ! அய்யோ! அய்யோ!" என்று ஒரே கூச்சல்! என்ன? என்ன நடந்தது?" என்று கேட்டுக்கொண்டே பத றிப்போன சங்கர் வீட்டின் உட்புறம் ஓடினான். கூடத்தை யொட்டிய அறைக்குள் ஒரு உத்தரத்தில் குப்பாயி தொங்கிக் கொண்டிருந்தாள்.சங்கர், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கயி றைத் துண்டித்து அவளைத் தூக்கிக் கொண்டான். ஆனால் பயனில்லை! குப்பாயி, தன் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது என்ற கற்பனையை மாற்றிக்கொள்ளாமல் அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டு விட்டாள்! 384