உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் முதலில் தலையூர் தலைநகரைக் காப்பது! பொன்னர் கொண்டு வரும் படைகளின் முற்றுகையைத் தகர்ப்பது! அதைத் தொடர்ந்து பொன்னரையும் அவனது படையையும் புறங்காட்டி ஓடச் செய்வது! ஓடும் பொன்னரை விடாமல் துரத்துவது! அவனை யும் வீழ்த்துவது! வளநாட்டு நிலப்பரப்பு முழுவதையும் தலை யூர் கொடிக்குக் கீழே கொண்டுவருவது! பதினெட்டு நாட்டின் தலைவர்களும் கூடிப் பேசி, பொன்ன ரைப் பொறியில் மாட்டவைக்கும் போர்த்திட்டத்தை வகுத்தனர். "பழிக்குப் பழி!" என்ற ஒரே வெறியுடன் பொன்னரின் படை தலையூர் நோக்கி! தணலில் தங்கமெனப் பாவையாள் அருக்காணி, படுகளம் நோக்கி! - புலவர் பிச்சையின் அண்ணன்மார் சுவாமி பாட்டி லிருந்து. 520