பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量尊进 பார்க்க வந்த நீ, உன் பசிக்கென்று இப்படியா பார்சல் கட்டிக் கிட்டு வந்திருக்கப்போறே?. சரி, சரி. நீயும் பாதித் தோசை எடுத்துக்கம்மா மஞ்சு!" என்று வேண்டிள்ை. மஞ்சுளாவின் நெஞ்சு குறுகுறுக்காமல் இருக்குமா? துரும் பைத் துணுக ஆக்கும் குண இயல்பு இன்னமும் அம்மாவிட மிருந்து விடைபெறக் காணுேமே? நீ என்னம்மா? பாதித் தோசை எனக்கு எப்படிப் பற்றுமாம்? “ என்று சிரித்தாள். படுசுட்டியாச்சே நீ இருக்கிற தோசையிலே பாதியைதி எடுத்துக்க அப்படின்னுதான் நான் சொன்னேன்! :

  • ஒஹோ, அப்படியா? சரி, சரி. எனக்கு வயிறு ஏற்க னவே நிரம்பியிருக்குது. நீதான் பசியோட இருககே. நீயே எல்லாத் தோசையையும் எடுத்துக்க அம்மா. தோசைதான் ஆறி அவலாய்ப் போயிருக்கும் தோசையைச் சாப்பிட்டுட்டு, அப்புறம் சோறும் சாப்பிடு ' என்ருள் மஞ்சுளா,

1. தோசை சாப்பிட்டாலே போதும்" என்று சொல்லிக் கொண்டே தோசையைச் சுவைக்கலாளுள் மீனுட்சி, மஞ்சுளாவின் உள்மனம், அப்பா அம்மாவின் பூசலேநீத்த்தலம் வரை பாதம் பதித்துவிட்ட சண்டையை எப்படித் தீர்ப்பது என்பதிலேயே கவலை கொண்டிருந்தது. அம்மா பக்க வாட்டிலே திரும்பிய தருணத்தில், அவளது இடதுகாதுப் பகுதி யில் பதிந்திருந்த கைவிரல் தழும்பு பளிச் சென்று தெரிந்த்து. மஞ்சுளாவின் பாசமனம் துணுக்குற்றது. ஐயோ! அப்பாவின் மூர்க்கத்தனமான முன்கோபம் என்றைக்குத்தான் மாற ப் போகிறதோ? as மஞக 狮彝 8 என்னம்மா! :

  • மறுபடியும் என்னம்மா சிந்தன் வந்திட்டுது:

۲ سی وrلام)