பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j47 கும் சட்டத்தை உடைக்க முடியுமா என்று பார்க்கும் முயற்சிக் குரிய ஆதாரம் உன் அம்மாவின் கையில்தான் இருக்கிறது : உன் திட்டப் பிரகாரம் உன் அம்மாவையும் அப்பாவையும் சமா தானம் செய்து வைக்க முயற்சி செய் விதியும் வினேயும் வழி விட்டால், தெய்வம் தண்திறக்கும்! ஆனுன், இப்போது முதலில் கண் திறக்கவேண்டியது உன் அம்மாதான்-என் அத்தை தான் மறந்து விடாதே, மஞ்சுளா மறுத்து விடாதே, மஞ்சுளா நான் சொல்லி விட்டேன் : இருமல் பிசிறு தட்டி வெடித்தது, "அத்தான், என் வரையிலும் என் அப்பாவும் சரி, என் அம்மாவும் சரி, என்னைப் பற்றி துளிகூட அக்கறை பட்டதாக நான் நம்பமாட்டேன். பருவம் அடைந்த மகக்ளத் த்னியே விட்டுட்டு அவாவர் வீம்பும் விருப்புமே பெரிது என்று திசை மாறிப் போனவர்கள் அவர்கள், ஆலுைம் அன்று நான் என் குல் முடிந்தவரை அம்மாவைத் தடுத்துத்தான் பார்த்தேன், வீட்டை விட்டு வெளிச்செல்ல வேண்டாமென்று கேட்டால் தானே? இன்றும் அவர்களே சமாதானப் படுத்தவே முயன்று வருகிறேன். அம்மாவிடம் இர்வில் பேசுவேன். நாளை அப்பா வையும்.சந்திப்பேன். முடிவு ஆண்டவன் கையில் அப்புறம் அவன் விட்டவழி!” என்ருள் மஞ்சுளா, அத்தான், உங்க ளோட மனசைப் புண்படுத்துற மாதிரி ஏதேனும் நான் ச்ொல்லி யிருந்தால், தயவு பண்ணி என்ன மன்னிச்சிடுங்க! என்று வேண்டிக் கொண்டாள். ஞானசேகரன் பற்றுக் கடந்த பாவனையில் மெய் நகைத் தான். :வின்னே மன்னிக்க நான் யார், மிஸ் மஞ்சுளா դ:» என்றன். கநீங்க என் அன்பு அத்தான் !” ஒ! இஸ் இட் ஸோ? அப்படியா, மிஸ் மஞ்சுளா ?” ஊம், சரி; நான் புறப்படுகிறேன்!" என்று விரக்தியுடன் கூறி, காரை இயக்க முன்ந்தான் ஞானசேகரன்.