பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

通常塗 அம்மாவின் வீம்புத்தனத்தையும் மீறிக்கொண்டு வெடித் துச் சிதறிய அந்த ஒட்டுறவு நல்ல முடிவைக் காட்டுமா? ஞான சேகரன் அத்தானும் அம்மாவும் அப்பாவைக் குறித்துச் சில மணிநேரத்திற்கு முன் நடத்திக் காட்டிய வாதப் பிரதிவாதங் களே அவள் மனம் டேப் ரெகார்டர் ஆகி மீண்டும் பேசிக் காட்டியது. அம்மா, சொல்லம்மா !” என்று நினைவுபடுத்தி ஆள் ைேட்சி வாய் திறக்கவில்லை : ஆகுல், மகளுக்கு அருகே வந்து நின்ற சுந்தரேசன் வாய் திறந்தார். 'நீ மயக்கம் போட்டு விழுந்தது எங்களைக் கதிகலங் கச் செஞ்சிடுச்சின்னு உன் அம்மா சொன்னுள், எங்களை என்ருல், என்னையும் உன் அம்மாவையும் சேர்த்துத்தான், மஞசு இதிலே சந்தேகத்துக்கு இடம் ஏதம்மா ?” என்று விளக்கம் தந்தார் அவர். தன்னுடைய அருமைமிகு மனையாட் டியின் அழகை ரசிக்க முனைந்தவராக மீனுட்சியைக் குறும்புத் தனத்தோடு கொளுசுதலாகப் பார்த்தார், சுந்தரேசன். அந்தப் பார்வையைச் சந்தித்தாளா மீனுட்சி ?- சுந்தரேச னின் மீளுட்சி ? ஆம். அம்மா என்ன சொல்லப் போகிருளோ? என்ற தவிப்பும் பயமும் மனத்திடையே புகைய, மஞ்சுளா உருகிளுள். 'அம்மா நல்ல விதமாகப் பதில் சொன்னல், அல்லது அப்பாவின் பேச் சுக்குச் சம்மதமாக மெளனமாக இருந்தால் நல்லது. ஒருவேளை அவள் தாறுமாருக ஏதாகிலும் ஆவேசத்தோடு சொல்லிவிட் டால், அப்பாவின் கோபம் பேயாட்டம் போட்டுவிடுமே? என்று உருக்குலைந்தாள். அம்மாவை உன்னிப்பாகப் பார்த்தாள். அன்ளேயின் நெற் றியில் பொலிந்த மங்கலத் திலகமும் கொண்டையில் மணந்த பூச்சரமும்தாம் எடுத்த எடுப்பில் அவள் பார்வையில் பட்டன, அப்புறம்தான் அவள் தன் தாயின் முகவிலாசத்தைச் சந்தித்