பக்கம்:பொன் விலங்கு.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 பொன் விலங்கு

இடத்தில் இப்போது அவை முடிந்து போய்விட்டதாகத் தோன்றியது. மோகினியின் மரணமாகிய அந்தச் சோகம் இன்றும் அவனைக் கீழே வீழ்த்திவிட்டது என்பது உண்மைதான். ஆனால் கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே என்ற மனித உணர்ச்சியையும் அவனால் இழக்க முடியவில்லை. வாழ்க்கையில் இன்னும் வலது காலை முன் வைத்து அவன் நடந்துதானாக வேண்டும். எத்தனையோ நீண்ட, முடிவற்ற பல பாதைகளில் நடக்க வேண்டும். லாரிபோகிற சாலைக்கு மேலே இருண்ட வானத்தில் எங்கிருந்தோ மோகினியின் குரல், "மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே' என்று பாடுவது போலவும் தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் தெரியச் சிரிப்பது போலவும் பிரமை வந்து அவன் கண்களை நனைத்தது. அவளுடைய நளின பாதங்களின் சலங்கை ஒலியும் எங்கிருந்தோ கேட்டது.

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின் மேற்கு ஜெர்மனிக்குப் புறப்படுவதற்காகச் சத்தியமூர்த்தி பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தபோது குமரப்பன் மட்டும் வழியனுப்ப வந்திருந்தான். விமானத்தில் ஏற வேண்டிய விநாடிவரை நண்பனோடு பல செய்திகளை மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, அன்று காலை செய்தியைப் படித்திருந்தார்கள் அவர்கள். கள்ள நோட்டுத் தயாரிக்கும் இரகசியக் குழுவில் முக்கியமான சம்பந்தமிருப்பதாக மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், குத்துவிளக்கு மானேஜர் கண்ணாயிரமும் கண்டுபிடிக்கப் பெற்றுக் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருந்த செய்தியைக் குமரப்பன் நண்பனுக்குப்படித்துக்காட்டியிருந்தான்.விமானம் புறப்படுகிறநேரம் வந்ததும் நண்பனிடம் கூறி விடைபெற்றுக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான் சத்தியமூர்த்தி. விமான நங்கை ஒரு டிர்ே நிறைய இனிப்புகளை வைத்துக்கொண்டு எல்லார் முன்பும் நீட்டி எடுத்துக் கொள்ளச் செய்தவள், சத்தியமூர்த்தியிடமும் வந்து ஸ்வீட்ஸ் என்று சொல்லிச் சிரித்தபடியே டிரேயை நீட்டினாள். அவனுடைய வலது கைஒருகணம் முன்னால் நீண்டுமிட்டாயை எடுக்கச்சென்றது. அடுத்த கணமே அந்தக் கையிலிருந்த நீலக் கல் மோதிரத்தில் யாருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/684&oldid=595955" இலிருந்து மீள்விக்கப்பட்டது